Share it

Tuesday 29 July 2014

கடிகாரம்


Image credits to its owner only.


மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய் என 
மெதுவாக நகர 
என்னைத் தாண்டி 
ஏன் நீ விரைகிறாய்?

Wednesday 23 July 2014

மூடாத செவிகள்

இத்தனை பெரிய 
பட்டாசு 
சத்தத்திலும் 
செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன் ,
கேட்காமல் போனது 
அவன் காதுகள் 
அல்ல ,
யுத்தத்தில் 
மறுத்துப் போனது 
அவன் இதயம் 
தான் என்று !

Friday 4 July 2014

பிரிவு



Image credits to its owner only. 


கனாக் கண்டேனடி 
உனைப்போல் 
ஒரு 
நண்பியும் 
நட்பும் கிடைக்குமா என்று 
பரவசமானேனடி
நீ 
கிடைத்துவிட்டாய் என்று 
இன்றோ 
பைத்தியமாகிறேனடி 
புரியாமல் 
நீ எனை 
பிரிந்தாய் என்று.

Saturday 21 June 2014

தவறிய அழைப்பு

தருவாயா ஒரு முறை 
என் கோபமெனும் தவறால் 
தவறிப்போன 
நம் அன்போடு சேர்த்து 
ஒரே ஒரு 
தவறிய அழைப்பை?
 

Tuesday 17 June 2014

நான்

 
என் அன்னை கருவறையில் 
கவிதையொன்று 
சுமந்தாச்சு 
அதுவே இன்று 
'கவீதா'
என்று ஆயாச்சு 
கருவறையில் நான் 
விட்ட முதல் மூச்சு 
கவிதான் 
முட்டிமோதி வெளியில் வந்து 
தத்தித் தாவி 
நடக்கையிலே 
ஆண்டவனும் 
எனக்களித்த முதல் 
பரிசும் அது தான் 
உயிரோடு கலந்தாச்சு 
அது எந்தன் 
உறவாச்சு 
உடம்பு தீயில் வெந்தாலும் 
உயிரும் கொஞ்சம் 
நொந்தாலும் 
மறுஜென்மம் நான் எடுப்பேன் 
அழியாத என் 
கவியாத்மா 
மறுபடியும் 
என்னை உருவாக்கும் 
மொத்தமாக......

Thursday 5 June 2014

காத்திருப்பு

 

என் இதயம் 
அழுவது
காத்திருந்து கால்கள்
வலிப்பதனால் அல்ல...
முகம்பாராது 
காத்திருக்கும் 
நம் 
நட்பு பொய்த்துவிடுமோ 
என்றுதான்...

Friday 30 May 2014

இடம் வேண்டும் !

செத்தும் பார்ப்பேன்
நான் 

செத்தும் பார்ப்பேன் 
நான் - என் 
மரணத்தின் 
பின்னாவது - உன் 
மனமெனும் 
சுவர்க்கத்தில் எனக்கோர் 
இடமிருப்பது 
உறுதியானால்..


Tuesday 27 May 2014

நேசம்

 

கவிதை எழுதினேன்
வரவில்லை,
 கண்ணீர்தான் வந்தது;
எனக்கல்ல,
என் பேனைக்கு.

நம் பிரிவின்  வலி
என் பேனைக்குக்  கூட
பொறுக்கவில்லை...

நீ மட்டும் எப்படி?

நிஜமாகவே 
நீ நேசித்தாயா?

Share it

Ads

Popular Posts