Share it

Sunday 25 November 2012

நான் பார்த்த முதல் கவிதை



கன்னிக் கவிதையில்
தடம் பதிக்கும் அந்நேரம்
கடவுள் துதி சொல்லவில்லை
உன் புகழ்
தொடங்காமல்
என் கவியுமில்லை
கவிதையா....?
என்னவென சிந்தித்தேன்
பக்கத்தில் வந்தமர்ந்தாய்
அம்மா என்றேன்
ஆஹா...... முதல் கவியும்
உருவாச்சு கவியொன்று
கேட்டாங்கம்மா
நானும் சொன்னேன்
போங்க சும்மா...
பிறகு நான் சிந்திச்சேன்
முதல் கவிதை
உனை நானும்
சந்திச்சேன்
நான் பார்த்த முதல் கவிதை
அது தான் என் கவி விதை
வளர்ந்து சின்ன மரமாச்சு
உன்னை விட ஒன்றுமில்லை
என்றும் இவள்
உன் பிள்ளை

இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான 'உதயசூரியன்' இதழில் 22-நவம்பர்-2012 திகதியன்று வெளியானது. 

செ. கவீதா, கொட்டகலை. 

Share it

Ads

Popular Posts