Share it

Sunday 2 December 2012

காரணம் தெரியுமா?



என் கண்ணாடியை 
நொடிக்கொரு தரம் 
பார்த்துக் கொள்கிறேன்
என்னையல்ல - என் 
கண்களுக்குள் 
வாழும் உன்னை.

Sunday 25 November 2012

நான் பார்த்த முதல் கவிதை



கன்னிக் கவிதையில்
தடம் பதிக்கும் அந்நேரம்
கடவுள் துதி சொல்லவில்லை
உன் புகழ்
தொடங்காமல்
என் கவியுமில்லை
கவிதையா....?
என்னவென சிந்தித்தேன்
பக்கத்தில் வந்தமர்ந்தாய்
அம்மா என்றேன்
ஆஹா...... முதல் கவியும்
உருவாச்சு கவியொன்று
கேட்டாங்கம்மா
நானும் சொன்னேன்
போங்க சும்மா...
பிறகு நான் சிந்திச்சேன்
முதல் கவிதை
உனை நானும்
சந்திச்சேன்
நான் பார்த்த முதல் கவிதை
அது தான் என் கவி விதை
வளர்ந்து சின்ன மரமாச்சு
உன்னை விட ஒன்றுமில்லை
என்றும் இவள்
உன் பிள்ளை

இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான 'உதயசூரியன்' இதழில் 22-நவம்பர்-2012 திகதியன்று வெளியானது. 

செ. கவீதா, கொட்டகலை. 

Sunday 12 August 2012

இடம் தருவாயா?



செத்தே போவேன்
ஒரு முறை.........
செத்தே போவேன்
ஒரு முறை - என்
மரணத்தின் பின்
உன்
மனமெனும்
சுவர்க்கத்தில்
எனக்கோர்
இடம் இருப்பது
உறுதியானால்.............


Tuesday 3 July 2012

வருவாயா ஒரு முறை...?


பலரோடு நான் 
ஒத்துத்தான் போகிறேன்,
உன் நினைவால் 
தனிமையில் நான்
செத்துப் போகிறேன். 

Sunday 1 July 2012

மரணித்து போனவளே...



உனக்காக 
எது வேண்டுமென்றாலும் 
தருவேன் என்றேன் - இன்றோ 
உன் கல்லறை முன் 
கதறுகிறேன் - என் 
உயிரைத் தருகிறேனடி 
எடுத்துக் கொள். 
எனக்காக உன் 
கல்லறையை தந்துவிடு.
மரணித்து போனவளே,
நான் உயிர் தருகிறேன் 
மரணத்தை மட்டும் தா.

Share it

Ads

Popular Posts