கன்னிக் கவிதையில்
தடம் பதிக்கும் அந்நேரம்
கடவுள் துதி சொல்லவில்லை
உன் புகழ்
தொடங்காமல்
என் கவியுமில்லை
கவிதையா....?
என்னவென சிந்தித்தேன்
பக்கத்தில் வந்தமர்ந்தாய்
அம்மா என்றேன்
ஆஹா...... முதல் கவியும்
உருவாச்சு கவியொன்று
கேட்டாங்கம்மா
நானும் சொன்னேன்
போங்க சும்மா...
பிறகு நான் சிந்திச்சேன்
முதல் கவிதை
உனை நானும்
சந்திச்சேன்
நான் பார்த்த முதல் கவிதை
அது தான் என் கவி விதை
வளர்ந்து சின்ன மரமாச்சு
உன்னை விட ஒன்றுமில்லை
என்றும் இவள்
உன் பிள்ளை
இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான 'உதயசூரியன்' இதழில் 22-நவம்பர்-2012 திகதியன்று வெளியானது.
செ. கவீதா, கொட்டகலை.
ஆஹா பாரதி....
ReplyDeleteஅன்னையில்லாமல் எதுவும் தானே பிறந்ததில்லை... விதையில்லாத விருக்ஷம் ஏது? அன்னையில்லாமல் சாதித்த பிள்ளை தான் ஏது?
அம்மா என்றாலே ஒரு கவிதை தான்.. அதுவும் ஒற்றை வரியாக வேண்டுமென்றால் நீ என்று சொன்னாலே போதும்...
கடவுளை துதிப்பது கூட இறுதியில் தான் வைத்தார் அறிஞர்கள்.. தாய் தந்தை தான் நம் முதல் தெய்வம் என்று சொல்லி வளர்த்தனர் பிள்ளைகளை....
மிக அருமையான கவிதை வரிகள் அம்மாவுக்கு தப்பாது பிறந்த இரத்தினமான பிள்ளை....
அன்புவாழ்த்துகள் பாரதி...
அழகுற தங்கள் கருத்தை பதிவு செய்து சென்றமைக்கு நன்றி தோழி. அன்னைக்கு நிகரேது? மீண்டும் வருக.
Deleteஅருமை... அருமை.... சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமையான அம்மாக் கவிதை...
ReplyDeleteவாழ்த்துகள், அடுத்த கவிதையில் சிந்திப்போம்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஅழகான கவிதை...
ReplyDeleteதொடருங்கள்
கருத்துக்கு மிக்க நன்றி.
Delete