Share it

Sunday 24 February 2019

எண்ணத்தில் ஒரு துளி

உன்னை என மனதுள்
எண்ணிக்கொள்ளும்
போதெல்லாம்
ஓர் ஆனந்தம்
உன் நினைவுகளை
மனதில் சுமக்கும் போதெல்லாம்
பேரானந்தம்
இங்குதான்
தனிமையிலே
சுதந்திரப் பறவையென
நரகத்தில் வாழ்வது விடவும்
நிலம் கடந்து - உன்
மனமெனும்
சுவர்க்க சிறைக்குள்
ஆயுள் கைதியாகி விடுகிறேன். 




உன்னை நேசித்த பின்புதான்
உலகை நேசிக்க தொடங்கினேன்
உன்னோடு பேசிய பின்புதான்
மனதோடு உறவாட
மிதமாய் கற்றுக்கொண்டேன்
உன்னோடு பழகிய பின்புதான்
காதலை உணர்ந்து கொண்டேன் - உன்
மனதில் விழுந்த பின்புதான் 

காதலின் ஆழமறிந்தேன் - இன்று 
உன்னை பிரிந்திருக்கிற போதுதான் 
காத்திருப்பின் சுகத்தையும் 
காதலின் வலியையும் 
அனுபவிக்கிறேன்...! 

ஞானம் 
கலை இலக்கிய சஞ்சிகை 
ஜூலை 2011 
பக்கம் 17 
இதழ் - 134 

கவிதா 
கொட்டகலை 

எண்ணத்தில் ஒரு துளி 
https://skaveetha.blogspot.com/2019/02/ennaththil-oru-thuli.html 
#கவிதை #காதல் #தனிமை #வலி #காத்திருப்பு #பிரிவு #நினைவுகள் #மனம் #நரகம் #சுவர்க்கம் #எழுத்து #ஆனந்தம் #மகிழ்ச்சி 

2 comments:

  1. வலியே காதலின் பெருமை! அருமையான கவிதை!

    ReplyDelete
  2. வலியே காதலின் பெருமை! அருமையான கவிதை!

    ReplyDelete

Share it

Ads

Popular Posts