Share it

Tuesday 1 January 2019

கோபம் வேண்டாம் நண்பியே!

உன் மௌனப் பார்வையில் 
என் காகித ஏடுகள் 
கவி வரிகளால் 
நிரம்பியது - ஒரு 
வார்த்தை பேசு பெண்ணே! 



இந்த இதயம் நிரம்பட்டும் 
நள்ளிரவில் என் விழிகள் 
உறங்கட்டும் 
பலரோடு நான் 
ஒத்துத்தான் போகிறேன் 
உன் நினைவால் 
இரவோடு நான் 
செத்துப் போகிறேன் 

கவிதைச்சமர் 
உதய சூரியன் 
வார இதழ் 
பக்கம் - 14 
எஸ். கவீதா 
(செ. கவீதா) 
கொட்டகலை 

No comments:

Post a Comment

Share it

Ads

Popular Posts