Share it

Tuesday, 27 May 2014

நேசம்

 

கவிதை எழுதினேன்
வரவில்லை,
 கண்ணீர்தான் வந்தது;
எனக்கல்ல,
என் பேனைக்கு.

நம் பிரிவின்  வலி
என் பேனைக்குக்  கூட
பொறுக்கவில்லை...

நீ மட்டும் எப்படி?

நிஜமாகவே 
நீ நேசித்தாயா?

Sunday, 2 December 2012

காரணம் தெரியுமா?



என் கண்ணாடியை 
நொடிக்கொரு தரம் 
பார்த்துக் கொள்கிறேன்
என்னையல்ல - என் 
கண்களுக்குள் 
வாழும் உன்னை.

Sunday, 25 November 2012

நான் பார்த்த முதல் கவிதை



கன்னிக் கவிதையில்
தடம் பதிக்கும் அந்நேரம்
கடவுள் துதி சொல்லவில்லை
உன் புகழ்
தொடங்காமல்
என் கவியுமில்லை
கவிதையா....?
என்னவென சிந்தித்தேன்
பக்கத்தில் வந்தமர்ந்தாய்
அம்மா என்றேன்
ஆஹா...... முதல் கவியும்
உருவாச்சு கவியொன்று
கேட்டாங்கம்மா
நானும் சொன்னேன்
போங்க சும்மா...
பிறகு நான் சிந்திச்சேன்
முதல் கவிதை
உனை நானும்
சந்திச்சேன்
நான் பார்த்த முதல் கவிதை
அது தான் என் கவி விதை
வளர்ந்து சின்ன மரமாச்சு
உன்னை விட ஒன்றுமில்லை
என்றும் இவள்
உன் பிள்ளை

இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான 'உதயசூரியன்' இதழில் 22-நவம்பர்-2012 திகதியன்று வெளியானது. 

செ. கவீதா, கொட்டகலை. 

Share it

Ads

Popular Posts