Share it

Tuesday, 17 June 2014

நான்

 
என் அன்னை கருவறையில் 
கவிதையொன்று 
சுமந்தாச்சு 
அதுவே இன்று 
'கவீதா'
என்று ஆயாச்சு 
கருவறையில் நான் 
விட்ட முதல் மூச்சு 
கவிதான் 
முட்டிமோதி வெளியில் வந்து 
தத்தித் தாவி 
நடக்கையிலே 
ஆண்டவனும் 
எனக்களித்த முதல் 
பரிசும் அது தான் 
உயிரோடு கலந்தாச்சு 
அது எந்தன் 
உறவாச்சு 
உடம்பு தீயில் வெந்தாலும் 
உயிரும் கொஞ்சம் 
நொந்தாலும் 
மறுஜென்மம் நான் எடுப்பேன் 
அழியாத என் 
கவியாத்மா 
மறுபடியும் 
என்னை உருவாக்கும் 
மொத்தமாக......

No comments:

Post a Comment

Share it

Ads

Popular Posts